தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது கரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள் படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றன.