தமிழ்நாடு

tamil nadu

ரோந்து பணியில் ஈடுபடும் உதவி ஆய்வாளருக்கு கரோனா?

By

Published : Apr 19, 2020, 10:13 AM IST

சென்னை: கோட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Corona issue  சென்னைச் செய்திகள்  கரோனா செய்திகள்  உதவி ஆய்வாளர் கரோனா  chennai si corona
ரோந்து பணியில் ஈடுபட்டு உதவி ஆய்வாளருக்கு கரோனா?

சென்னை கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவர், கடந்த சில நாட்களாக பாரிமுனைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய சுகாதாரத் துறை அலுவலர்கள், அவரை அழைத்துச் சென்று சளி, ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கரோனா பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கால் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - அதிர்ச்சித் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details