தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை நகரமாக மாறியதா தலைநகரம்? - குற்றப்பின்னணி - முழுவிவரம்!

சென்னையில் கடந்த 25 நாள்களில் மட்டும் 17 கொலைகள் அரங்கேறி, 19 நபர்கள் பலியாகி விட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

By

Published : May 26, 2022, 5:38 PM IST

கொலை நகரமாக மாறியதா தலைநகரம்?
கொலை நகரமாக மாறியதா தலைநகரம்?

சென்னை:தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரை 25 நாள்களில் இரண்டு இரட்டைக் கொலைகள் உள்பட 17 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுவும் சில கொலைகள் கொடூரமாக நடந்துள்ளன. குறிப்பாக கடந்த மே 1ஆம் தேதி நள்ளிரவு சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் நடந்த துக்கநிகழ்வில் ஒன்றாக மது குடித்த இளைஞர்கள் சதீஷ்குமார், அருண் ஆகிய இருவரும் தினேஷ் என்பவரால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். போதையில் செல்போன் காணாமல் போனதால் கொலை நடந்துள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

மே 2ஆம் தேதி அம்பத்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக நடந்த மோதலில் ஹரிஷ் பிரம்மா, அவரது மனைவியான ரஷீயா கத்துனாவை அடித்துக்கொலை செய்தார். கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

மே 2ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன், ஊழியர்கள் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். உரிமையாளரின் மனைவி லோகேஸ்வரி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

மே 6ஆம் தேதி சென்னை குன்றத்தூரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தியாகராஜன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 7ஆம் தேதி மயிலாப்பூரில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதாவை கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த பதம்லால் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோர் சேர்ந்து அடித்துக்கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து தப்பினர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஆயிரத்து 127 சவரன் தங்க நகைகள், இரண்டு வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.தப்பிய 2 பேரை ஆந்திராவில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த மே 10 ஆம் தேதி ராயபுரத்தில் திமுக பிரமுகர் சக்கரபாணி என்பவர் கொலையாகி, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக்கிடந்தது. மூன்று நாள்களுக்குப் பிறகே அவர் கொலை செய்யப்பட்டது காவல் துறையினருக்கு தெரியவந்தது. கள்ளக்காதலி தமிம்பானு, அவரது சகோதரர் வாசிம் பாஷா, ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அடையாறில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலையை இதுவரை காவல் துறை தேடிவருகின்றனர்.

மே11ஆம் தேதி கோயம்பேட்டில் கள்ளக்காதலியோடு பேசியதால் மதுபோதையில் கத்தியால் குத்தி சுப்பரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமச்சந்திரன் என்பவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே நாளில் சென்னை மணலியில் குடும்பத்தகராறில் தந்தை பாலசுப்பிரமணியை கொலை செய்த அவரது மகன் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மே 16ஆம் தேதி மீஞ்சூர் பகுதியில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்த போது கூலிப்படையை சேர்ந்தவர்கள் சினிமா காட்சியில் வருவது போல லாரியை வைத்து, காரை இடித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதில் தொழிலபதிபர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மே 16ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்து ஆபாசமாகப் பேசியதால் ராஜேந்திரன் என்பவரை குடும்பத்தாரே கொலை செய்தனர். இந்த வழக்கில் தற்கொலை நாடகமாடிய மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மே 17ஆம் தேதி சென்னை ஆதம்பாக்கத்தில் +1 மாணவியை பெண் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ரவுடியினை தடுக்க சென்ற மூதாட்டியை வெட்டிக்கொன்ற சம்பவம் நடந்தது. ஆதம்பாக்கம் ரவுடி விக்கி மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த +1 மாணவியை காதலிக்க சொல்லி வலியுறுத்தி அவரது வீட்டின் முன்பு நின்று கையில் கத்தியோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டிகேட்ட மூதாட்டி வல்லத்தாள் என்பவரை மதுபோதையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார். இது தொடர்பாக விக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 18ஆம் தேதி, சென்னை அமைந்தகரை செனாய் நகர்ப் பகுதியில் பட்டபகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியது. கொலைக்கான காரணத்தையோ, கொலையாளிகளையோ போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரண்டு பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்றவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மே 18ஆம் தேதி கொரட்டூர் பாடி மேம்பாலத்தில் பிளாட்பாரத்தில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் அய்யப்பன் என்பவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மே 19ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை வாங்கித்தரவில்லை எனக்கூறி இளைஞர் ராகுல் என்பவரை, சிலர் சுமார் 40க்கும் மேற்பட்ட முறை வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், கௌரிசங்கர், சரவணன் மற்றும் ரகுராமன் ஆகிய மூவர் சரணடைந்தனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் வெட்டும் காட்சிகள் வெளியாகின.

மே 20 வளசரவாக்கத்தில் சொத்துக்காக தந்தையைக் கொலை செய்து, உடலை துண்டுதுண்டாக வெட்டி பேரலில் வைத்து வேலூர் காவேரிப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தில் புதைத்த மகனை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். மே 24ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் பாலச்சந்தரை ரவுடி கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடி சென்னைக்கு வர இருந்த நிலையில், பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள நிலையிலும் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே 25ஆம் தேதி பூந்தமல்லி அருகே தலை, கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரை எரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. யார் என்பது குறித்து திருவேற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக 8 கொலைகளும், 1 ஆதாயக் கொலைகளும், குடும்பத் தகராறு மற்றும் சொத்து தகராறு காரணமாக 5 கொலைகளும், ரவுடிகள் மற்றும் தொழிற்போட்டியால் 3 கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளது அடங்கும்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட இடங்களில் மட்டும் கடந்த 25 நாள்களில் 12 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 13 நபர்கள் பலியாகி உள்ளனர். ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பகுதியில் 5 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 1597 கொலைகள் நடந்துள்ளன.

இதையும் படிங்க:ஜி ஸ்கொயர் விவகாரம் - காவல்துறை கூடுதல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details