சென்னை:சிறுமிகளின் ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக சர்வதேச போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் 35 வயதான விக்டர் ஜேம்ஸ் என்பவரை கடந்த மாதம் மார்ச் 18 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். விக்டர் ஜேம்ஸ் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை கட்டாயமாக வற்புறுத்தி ஆபாச படங்கள் நடிக்க வைப்பது, அதை வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இத்தகைய குற்றங்களை தடுப்பதற்காக விசாரணை நடத்திய சர்வதேச அமைப்புகள், சர்வதேச மாநாட்டில் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன்புணர்வு, குழந்தைகளுக்கு எதிரான ஆபாசத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்வது, குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்வுகளை தடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட விக்டர் ஜேம்ஸை கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தநிலையில் விக்டர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (மே 19) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், 'விக்டர் ஜேம்ஸ் எட்டு சிறுமிகளை ஆபாசமாக நடிக்க வைத்து செய்து அதனை வீடியோ எடுத்ததோடு, அவர்களைத் தொடர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில சிறுமிகளை அழைத்து வருமாறு இவர் மிரட்டி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் இதில், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானோர் 12 வயது கீழே உள்ளவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் எடுத்து வேறு யாருக்காவது விற்பனை செய்து உள்ளாரா? அல்லது இணையத்தில் பதிவேற்றி உள்ளாரா? என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக' சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிறுமிகளை ஆபாச படம் எடுத்த ஆராய்ச்சி மாணவர் கைது.. பிரதமர் அலுவலகத்திற்கு வந்த மெயில்..