சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் இக்பால் (40). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூலை.5) காலை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று (ஜூலை.6) காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இக்பால், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை, சுமார் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் இருந்த விலையுயர்ந்த டி.வி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.