தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2021, 4:33 PM IST

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணம் கொள்ளை!

சென்னை: கோட்டூர்புரத்தில் பூட்டிய வீட்டில் 50 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளையடித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

theft
theft

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் இக்பால் (40). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூலை.5) காலை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று (ஜூலை.6) காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இக்பால், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை, சுமார் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் இருந்த விலையுயர்ந்த டி.வி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனே இது தொடர்பாக இக்பால் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.திருட்டு நடைபெற்ற இடத்தில் அடுத்தடுத்து வீடுகள் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் யாரேனும் உதவியுடன் இது நடந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆர்கே நகரில் வீடு புகுந்து செல்போன் திருடிய 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details