சென்னை:இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்த குழுதான் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும். இதனால் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டபேரவைகளில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க பயன்படுத்த இருக்கும் வாக்குபெட்டிகள் மற்றும் ஆவணங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிலுவலர்கள் பெற்றனர். பின்னர் பாலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வாக்கு பெட்டிகளையும், ஆவணங்களையும் சென்னை கொண்டு வந்தனர்.