தமிழ்நாடு

tamil nadu

ஆட்டோவை திருடிய சவாரி செய்த நபர்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சென்னை: சூளை பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சவாரியாக வந்த நபர் ஆட்டோவை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Mar 20, 2020, 10:34 PM IST

Published : Mar 20, 2020, 10:34 PM IST

ஆட்டோ திருட்டு
ஆட்டோ திருட்டு

சென்னை திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்தவர் கரிகாலன் (57). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று மதியம் சூளை பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு சவாரிக்காக நின்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவ்வழியே வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குடி போதையில் ஆட்டோவில் ஏறி ராட்லர் தெருவிற்கு போக வேண்டுமென கூறியுள்ளார்.

இதனால் கரிகாலன் ஆட்டோவை எடுத்து அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் தனக்கு மது வாங்கி தருமாறு கரிகாலனிடம் சவாரியாக வந்த நபர் பணிந்து கேட்டுள்ளார்.

இதனால், கரிகாலன் ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகிலிருந்த டாஸ்மாக்கிற்கு சென்று மது வாங்கிவிட்டு வந்துள்ளார். பின்னர், அங்கு பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் சவாரியாக வந்த நபரும் காணாமல் போயுள்ளதால், ஆட்டோவை அவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் கரிகாலன் புகார் அளித்துள்ளார்.

விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர்

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்நபரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டியிடம் நகையை பறித்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details