தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2021, 8:03 PM IST

ETV Bharat / state

பெரியார் நகர் காய்கறி மார்க்கெட் வியாபாரி மீது தாக்குதல் - அலுவலர்களின் வீடியோ வைரல்

தாம்பரம் அருகே பெரியார் நகர் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரியை அடித்து கடையை உடைக்கும் மாநகராட்சி அலுவலர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வியாபாரி மீது தாக்குதல்
வியாபாரி மீது தாக்குதல்

சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பெரியார் நகர் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மணிகண்டன் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

அவரிடம் தாம்பரம் மாநகராட்சி அலுவலர்கள் நாகராஜ், காளிதாஸ் ஆகியோர் நடைபாதையில் காய்கறி கடை நடத்த கூடாது, உடனடியாக காலி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

வியாபாரி மீது தாக்குதல்

அதற்கு வியாபாரி தான் அனுமதி பெற்று கடை நடத்துவதாகவும் மீறி கடையை எடுக்க முற்பட்டாள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவேன் என்றும் கூச்சலிட்டு உள்ளார்.

இதனை சற்றும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி அலுவலர்கள் அவரது காய்கறி கடையை அடித்து நொறுக்கி மணிகண்டனையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வியாபாரி மீது தாக்குதல்

வியாபாரி மணிகண்டன் புகார்

மேலும் மாநகராட்சி அலுவலர்கள் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் வியாபாரி மணிகண்டன் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவை பள்ளி மாணவியின் கடிதம் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த முடிவு!

ABOUT THE AUTHOR

...view details