சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள வெங்கட்ராம் தெருவில் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அதேப் பகுதியில் வசிக்கும் அருண், விக்கி என்ற இரு இளைஞர்களை கொலைவெறியுடன் கத்தியால் தாக்கியுள்ளனர்.
கோஷ்டியில் யார் பெரிய ஆள்? இருவருக்கு கத்திக்குத்து!
சென்னை: ஐஸ்அவுஸ் பகுதியில் நள்ளிரவில் பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காயமடைந்தவர்கள்
இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஐஸ்அவுஸ் காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோஷ்டிகள் இடையே யார் பெரிய ஆள் என்பதை வெளியே காட்டிக் கொள்ளவே இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.