பாலைவனப் பகுதிகளை ஒட்டியுள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளிகள் நாள் ஒன்றுக்கு 80,500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும். இது, ஒரு நாளில் 35 ஆயிரம் மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும்.
கென்யா சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான் நோக்கி புலம்பெயரும் என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்திருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டும் வரும், ஆனால் இந்த ஆண்டு ஜெய்ப்பூர் வரையிலும், இந்தியாவின் மத்திய பகுதியான மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் திசை காரணமாக வந்துள்ளது. எனவே தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. எனினும் இதன் நகர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஒருவேளை வெட்டுக்கிளி வந்தால் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி அவற்றைக் கட்டுப்படுத்தலாம்: