தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை நடிகையை ஏமாற்றிய நடிகர் கைது!

சென்னை : திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Jun 11, 2020, 2:06 PM IST

தியாகராஜன்
தியாகராஜன்

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் 'தரிசு நிலம்' எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் 'நாடோடிகள்' படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்ததுள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி துணை நடிகையுடன் தியாகராஜன் நெருக்கமாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. மேலும் நடிகையிடம் இருந்து அவர் பணம், நகை உள்ளிட்டவற்றையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணி கிடைத்ததைத் தொடர்ந்து அவர், காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து, துணை நடிகை தன்னைவிட ஒரு வயது மூத்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறி தியாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தியாகராஜன்

இந்நிலையில், இது குறித்து துணை நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தியாகராஜன்மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்பட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து தியாகராஜன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details