சென்னை :கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள், பணியாளர்கள் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோயால் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அப்போது, கரோனா தொற்றினால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்த, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட 53 பேர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டியவர்களின் அனைத்து விவரங்களைச் சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’