சென்னை: தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (hindu mission hospital) ஏராளமான பூனைகள் சுற்றி வந்துள்ளன. இதில் சிகிச்சை நோயாளிகளை சில பூனைகள் கடித்தாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்கள் மூலம் பூனைகளை பிடித்துள்ளனர். அப்போது பூனைகளை கொடுமை படுத்தி பிடித்த வீடியோ மற்றும் இறந்த நிலையில் மருத்துவமனை முன்பு கிடந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வரைலானது.
இந்த நிலையில் மருத்துவமனையில் பூனைகள் பிடித்து கொல்லப்பட்டதாகவும், கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.