தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2022, 10:18 AM IST

Updated : Oct 19, 2022, 11:58 AM IST

ETV Bharat / state

அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தில் திடீர் தீவிபத்து

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை கிளம்பியது. இதை கண்ட இரண்டு மின்வாரிய ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் தீயானது மளமளவென பரவியது.

அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தில் திடீர் தீவிபத்து

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்த கணினி, நாற்காலி, பல முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏற்படவில்லை. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்து: சென்னையைச் சேர்ந்த மூவர் பலியான சோகம்

Last Updated : Oct 19, 2022, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details