தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 5) புதிதாக 5 ஆயிரத்து 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 6 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது. தற்போது 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் 5,175 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி!
17:58 August 05
தமிழ்நாட்டில் மேலும் 5,175 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 112 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரம் பின்வருமாறு:
சென்னை - 1,05,004
செங்கல்பட்டு - 16,484
திருவள்ளூர் - 15,570
மதுரை - 11,593
காஞ்சிபுரம் - 10,655
விருதுநகர் - 9,339
தூத்துக்குடி - 8,210
திருவண்ணாமலை - 6,905
வேலூர் - 6,705
தேனி - 6,539
ராணிப்பேட்டை - 6,073
திருநெல்வேலி - 5,820
கோயம்புத்தூர் - 5,805
கன்னியாகுமரி - 5,607
திருச்சி - 4,733
விழுப்புரம் - 4,239
கள்ளக்குறிச்சி - 4,063
சேலம் - 4,088
கடலூர் - 4,016
ராமநாதபுரம் - 3,483
தஞ்சாவூர் - 3,322
திண்டுக்கல் - 3,202
சிவகங்கை - 2,742
புதுக்கோட்டை - 2,666
தென்காசி - 2,564
திருவாரூர் - 1,851
திருப்பத்தூர் - 1,356
கிருஷ்ணகிரி - 1,206
அரியலூர் - 1,130
திருப்பூர் - 1,024
நாகப்பட்டினம் - 917
நீலகிரி - 897
நாமக்கல் - 868
தருமபுரி - 808
ஈரோடு - 829
கரூர் - 654
பெரம்பலூர் - 568
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 846 பேர்
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 653 பேர்
ரயில் மூலம் வந்தவர்கள் - 426 பேர்
TAGGED:
தமிழ்நாடு கரோனா நிலவரம்