தமிழ்நாடு

tamil nadu

புதுவையில் 24 மணி நேரத்தில் 442 நபர்களுக்கு தொற்று உறுதி!

By

Published : Jun 12, 2021, 1:28 PM IST

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 442 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவையில் 24 மணி நேரத்தில் 442 நபர்களுக்கு தொற்று உறுதி!
புதுவையில் 24 மணி நேரத்தில் 442 நபர்களுக்கு தொற்று உறுதி!

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்றால் புதுச்சேரியில் 321 நபர்களும், காரைக்காலில் 97, மாகேவில் 10, ஏனாமில் 4 நபர்களுக்கும் எனப் புதியதாக 442 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 12ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கரோனா தொற்றால் புதுச்சேரியில் 7 நபர்கள், காரைக்காலில் 2 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5 ஆயிரத்து 715 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 844 நோயாளிகள் நேற்று (ஜூன் 12) வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கைகள் காலியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details