கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ரூ. 3 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 36 நாட்களில் 3,55,603 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 3,47,33,599 வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
3 crore rupees collected in 36 days - tn police
தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 36 நாட்களில் தமிழ்நாடு காவல்துறை 3,36,426 வழக்குகளை பதிவு செய்து, தடையை மீறியதாக 3,55,603 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 3,01,111 வாகனங்கள் பறிமுதல் செய்து, ரூ. 3,47,33,599 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.