தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2020, 5:03 PM IST

ETV Bharat / state

ஊரடங்கை மீறியதாக சுமார் 2 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு!

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 நாள்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

case
case

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை மீறுவோர் மீது தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 24 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை 2 லட்சத்து 5 ஆயிரத்து 54 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும் தடையை மீறியதாக 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேரை காவல் துறையினர் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர்.

ஊரடங்கை மீறியதாக இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரத்து 896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 98 லட்சத்து 7 ஆயிரத்து 394 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டுக் காளைக்கு இறுதிச் சடங்கு: ஊரடங்கை மீறிய 7 பேர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details