தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2019, 7:47 AM IST

ETV Bharat / state

10 கிலோ  போதைப் பொருள் பறிமுதல் - 5 பேர் கைது

சென்னை : வளசரவாக்க பகுதியில்  வீட்டில்  பதுக்கி வைத்து போதை பொருள் சப்ளை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

10 கிலோ  போதைப் பொருள் பறிமுதல் - 5 பேர் கைது

சென்னை வளசரவாக்கம் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு வந்த தகவலையடுத்து , வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வளசரவாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் ஒரு கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - 5 பேர் கைது

இதையடுத்து விசாரணையில் , அவர்கள் அளித்த தகவலின் பேரில் , அமர்நாத்(25), சரவணன்(26), முருகேசன்(எ)குமார்(33), தமிழ்வாணன்(47), சசிதரன்(29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாக போதைப்பொருட்கள் வாங்கி இங்கு விற்பனை செய்வதாக தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்டபோதை பொருள் எந்த வகை என்பதை கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு போதை பொருள் கடத்தல் வழக்கில் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களா? போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details