தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களின் அன்பு நெகிழ வைக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை: மக்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது என தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 25, 2019, 11:25 PM IST

Updated : Mar 26, 2019, 12:58 PM IST

தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது,




தமிழகத்தின் குரலை, உரிமையை நாடாளுமன்றத்தில் ஒலிக்கின்ற ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அத்தகைய செயலை செய்யவில்லை. மக்கள் பல முறை கூறிவிட்டனர்.

பிரதான சாலையை மேம்படுத்துவது, மெட்ரோ திட்டம் ஆகட்டும், குப்பை கிடங்கு மறுசுழற்சி ஆகட்டும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனை ஆகட்டும் அனைத்தையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது தான் அவர்களுடைய வருத்தம். இதில் கவனம் செலுத்தி முழுமையாக தி.மு.க. வின் சார்பில் தென் சென்னை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நாங்கள் நிறைவேற்றுவோம்.

மக்களின் வரவேற்பு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியை தருகிறது. தேர்தலை தாண்டி அவர்களின் அன்பு தான் என்னை நெகிழ வைத்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என அவர்களால் முடிந்த வகையில் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆரத்தி எடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

மாவட்ட செயலாளர் எங்களது தேவையை நேரடியாக கவனித்து கொள்கிறார். அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பு புதிதாக ஒரு நல்ல வேட்பாளர் வந்துள்ளார் என எழுச்சியோடு அவர்கள் தருகின்ற அன்பு என்னை நெகிழ வைக்கின்றது" என்று கூறினார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
Last Updated : Mar 26, 2019, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details