தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலை காவல்துறை பாதுகாப்புடன் மைலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

By

Published : Jun 22, 2019, 8:47 PM IST

நாளை நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நடைபெற இருந்த நடிகர் சங்கத் தேர்தலை முன்னாள் சங்க உறுப்பினர்கள் 61 பேர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாவட்ட பதிவுத்துறை தேர்தலை நடத்தக் கூடாது என உத்தரவிட்டதை ஏற்று பாதுகாப்பு கேட்ட வழக்கில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சங்கத்தின் தேர்தலை திட்டமிட்டபடி 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை மட்டும் நடத்தக்கூடாது என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறவுள்ள தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த முறை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்ற மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் இம்முறையும் தேர்தலை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், இத்தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details