தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2019, 2:59 PM IST

ETV Bharat / state

3 வயது குழந்தை கடத்தல்: காட்டிக்கொடுத்த சிசிடிவி!

சென்னை: எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் மூன்று வயது குழந்தையைக் கடத்திச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

குழந்தை திருடன்

ஒடிசாவைச் சேர்ந்த ராம் சிங், நீலாவதி தம்பதி தங்கள் மூன்று வயது குழந்தை சோம்நாத்துடன் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தனர்.

ரயில் வரத் தாமதமாகும் என்பதால் குழந்தையுடன் இருவரும் ஆறாவது நடைமேடையில் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் திடீரென கண் விழித்துப் பார்த்தபோது குழந்தை மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சிசிடிவி காட்சி

இது குறித்து எம்ஜிஆர் மத்திய ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது, ஒரு நபர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்வது தெரியவந்தது.

கையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையைத் தூக்கிச் செல்லும் அந்த அடையாளம் தெரியாத நபர் யார்? என்று ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details