அரியலூர் மாவட்டம் நரியங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனியாருக்குச் சொந்தமான கனிம சுரங்கத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வி.கைகாட்டி என்ற பகுதியில் இவர் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி மோதிய விபத்தில் இவருக்கு இருகால்களும் முறிந்தன. பின்னர் அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஆலை மற்றும் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் இறந்தவரின் உறவினர்கள் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.