உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவத் துறையும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவருகின்றன.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் டால்மியா சிமெண்ட் ஆலை சார்பில் மாணவர்களுக்கு முகமூடி, கையுறைகள் வழங்கப்பட்டன.