தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டி விட்டு, வீட்டிற்குச் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 100 சரவன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலையில் அந்தப் பகுதியில் சென்றவர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிவக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த சிவக்குமார் கடையைத் திறந்து பார்த்த போது, லாக்கரில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.