தமிழ்நாடு

tamil nadu

ஜூலை 31இல் பெரு நாட்டில் கால்பந்து தொடர் தொடக்கம்!

By

Published : Jun 9, 2020, 10:34 PM IST

லிமா: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து தொடர், ஜூலை 31ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக பெரு கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

peru-sets-july-date-for-footballs-restart
peru-sets-july-date-for-footballs-restart

கரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே ஜெர்மனியில் பண்டஸ்லிகா கால்பந்து தொடர் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து லாலிகா தொடரும் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் பார்வையாளர்களின்றி கால்பந்து தொடர்களை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

தற்போது பெரு கால்பந்து சம்மேளனம் சார்பில் முதல் டிவிஷன் கால்பந்து தொடர்கள் ஜூலை 31ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாகிகள் பேசுகையில், ''லிகா 1 கால்பந்து தொடர் ஜூலை 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு திரும்ப வேண்டும்'' என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details