கரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், கேகேஆர் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. வீரர்கள், அணி நிர்வாகத்தினருக்கு பயோ பபுல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதை தாண்டியும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என எண்ணுகிறேன்.