பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில் நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
அதேசமயம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் எட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஆறு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனால் இனி வரும் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
டி காக், ரோஹித், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கிரண் பொல்லார்ட் என அதிரடி வீரர்கள், தங்களது திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில், மும்பை அணி எதிரணிக்கு சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு சில போட்டிகளில் சொதப்பிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால், எதிரணியினர் கடும் நெருக்கடியை சந்திப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மும்பை அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: