இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முன்னதாக நடத்த மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா 3-0 என கணக்கில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து முதலாவது டெஸ்ட் தொடர் போட்டி மார்ச் 4ஆம் தேதி மொகாலியில் நடந்தது.
இந்தப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பந்த் 96 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களும், ஹனுமா விஹாரி 58 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.