நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் 33 ரன்களிலும், பிளென்டல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து வந்த ராஸ் டெய்லரும் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.