ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், மற்றொன்றில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன.
இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற ரோஹித் சர்மா, கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மெல்போர்னில் 14 நாள்கள் தனிப்படுத்தப்பட்டிருந்தார்.