10 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்தில், மே 30-ல் தொடங்குகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறையே நடக்கும் உலகக் கோப்பையை வெல்வதற்கு கிரிக்கெட் அணிகளுக்கிடையே மிகப்பெரிய போராட்டம் நடக்கும். இதனால் உலகக்கோப்பைத் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை மார்ச் 23-ல் தொடக்கம்!
துபாய் : 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி
இந்த வருடம் தொடங்கும் உலகக் கோப்பை தொடரை நேரில் கண்டு ரசிப்பதற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், மார்ச் 23-ல் டிக்கெட் விற்பனைத் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் உலகக்கோப்பை இணையதளத்தில் கிடைக்கும் எனவும், வழக்கம்போல் முதலில் வருபவர்களுக்கே முன்னுறிமை என தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.