கடந்த வெள்ளிக்கிழமை ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளிலிருந்து சில வீரர்களை ஏலத்திற்கு முன்பே விடுவித்தன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் சோரே, சைத்தன்யா ஆகியோரை அணியிலிருந்து விடுவித்தது.
மேலும் சென்னை அணியின் மூத்த வீரர்களான ஷேன் வாட்சன், பிராவோ ஆகியோரை அணி நிர்வாகம் மீண்டும் தக்கவைத்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனிலேயே சென்னை அணியில் பல வீரர்களின் வயது 30 தாண்டி இருந்ததினால், ரசிகர்கள் சீனியர் அணி என அழைத்தனர்.
இந்நிலையில் தற்போதும் அதுபோன்று அதிக வயதுடைய வீரர்களையே சென்னை அணி தக்கவைத்துள்ளது. இது குறித்து சர்ச்சைக்கு பெயர் போன் சஞ்சய் மஞ்ரேக்கர் தனியர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.