2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த விடாலிட்டி பிளாஸ்ட் (vitality Blast) தொடரின்போது கள நடுவர்களால் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசும் விதம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு, அவருடைய பந்துவீச்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரிசோதனை செய்தது. அதில் முகமது ஹஃபீஸின் முழங்கை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் கடந்து 15 டிகிரி விலகிச் செல்வதால், அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சம்மந்தப்பட்ட போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதித்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசியும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி முகமது ஹஃபீஸ் சர்வதேச மற்றும் டி20 லீக் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.