தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புதிய அவதாரத்தில் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்!

டெல்லி: அதிரடி வீரரும் முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான பிராண்டன் மெக்கல்லம் ஓய்வுக்குபின் தான் விளையாடிய ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

By

Published : Aug 10, 2019, 10:52 AM IST

MCCULLUM

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள அதிரடி வீரர் பிராண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக ஐபிஎல்லில் தான் விளையாடிய கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்கு செயல்பட விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிராண்டன் மெக்கல்லம் ஓய்வுக்கு பின் தான் விளையாடிய ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளார்

இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே 158 ரன்களை எடுத்து சாதனை படைத்தார்.

இதற்கு முன் இவர் கரீபியன் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவந்தார். அப்போது தன் அசாத்திய பேட்டிங் திறமையால் கொல்கத்தா ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர். இப்போது தான் விளையாடிய கொல்கத்தா அணிக்கே பயிற்சியாளராக மாறி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார் .

ABOUT THE AUTHOR

...view details