இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவை, இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தேர்வு செய்யாதது ஏன்? என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய லாரா, "ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பார்க்கையில், ஏன் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அவர் ஆட்டத்தின் சூழல் அறிந்து விளையாடும் வீரர். மேலும் அவரது ஆட்டமுறை, களமிறங்கும் வரிசை ஆகியவை இந்திய அணிக்கு உதவியாக அமைந்திருக்கும்.