இந்தியா, தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தானா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷாபாலி வர்மா - ரிச்சா கோஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில், அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா, 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 47 ரன்களையும், ரிச்சா கோஷ் 44 ரன்களையும் சேர்த்தனர்.