இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 159 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 27 சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் இந்தியா விளையாடும் முதல் பகலிரவு போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.