இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்தியாவில் 433 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ்: இலவச முகக்கவசங்கள் வழங்கிய பதான் சகோதரர்கள்
கரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய அணியின் முன்னாள் வீரர்களான இர்ஃபான் பதான், யூசஃப் பதான் ஆகியோர் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கோவிட் -19 வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க இந்திய அணியின் முன்னாள் வீரர்களான இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் ஆகியோர் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கியுள்ளனர். இதுகுறித்து இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நமது சமூகத்திற்காக நாங்கள் இதை செய்கிறோம். உங்களால் முடிந்த சுகாதார உதவியை நீங்களும் செய்யுங்கள். ஆனால், கூட்டம் கூடாதீர்கள்” பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'பாலைவனமாகப் போகும் இந்தியா' - பெயரை மாற்றி கருத்து சொன்ன அஸ்வின்!