கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இந்தாண்டு நடைபெறவிருந்த 13ஆவது சீசன் ஐபிஎல் தொடரும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மினி ஐபிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்(டிஎன்பிஎல்) டி20 தொடரை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகவலை டிஎன்பிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.