தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2019, 11:02 AM IST

ETV Bharat / sports

கரோலினா மரினுக்கு தங்கம், சவுரப் வர்மாவுக்கு வெள்ளி!

சையத் மோடி பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரப் வர்மா வெள்ளிப் பதக்கம் பெற்ற நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

carolina marin
carolina marin

இந்த ஆண்டுக்கான சையத் மோடி பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் சவுரப் வர்மா, தைவானைச் சேர்ந்த வாங் சூ வெய்யுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 15-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த சவுரப் வர்மா, இரண்டாவது செட்டில் கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 17-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் இழந்தார். இதன் மூலம், 48 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சவுரப் வர்மா 15-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்ததால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரின், தாய்லாந்தைச் சேர்ந்த பிட்டாயாபோர்ன் சைவானுடன் (Pittaiyaporn Chaiwan) மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா மரின் 21-12, 21-16 என்ற நேர்செட் கணக்கில் சைவானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதையும் படிங்க:டேபிள்டென்னிஸ் உலகக்கோப்பை: இந்திய வீரருக்கு எழுந்து நின்று கைதட்டிய சீனர்கள்!

ABOUT THE AUTHOR

...view details