பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் (18ஆவது ரேங்க்) - தாய்லாந்தின் புசானன் ஒங்பம்ரங்பான் (13ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
இப்போட்டியின் தொடக்கத்தில் 3-2 என முன்னிலை வகித்த சாய்னா, பின்னர் தாய்லாந்து வீராங்கனையின் அபார ஆட்டத்தால் அவரிடம் சரணடைந்தார். 45 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சாய்னா 20-22, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.