தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கான படப்பிடிப்பை நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் நடிகை குஷ்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தொலைக்காட்சி நிறுவனங்கள் மே 5ம் தேதி முதல் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும் மே 11ம் தேதி முதல் மெகா தொடர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணியிடம் பேசினேன், அவர் யோசித்து கூறுவதாக கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசினேன். அவர் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஏப்.25ஆம் தேதிக்கு மேல் சுகாதாரத்துறையினரிடம் பேசிவிட்டு யோசித்து கூறுவோம். அது மட்டுமல்லாமல் கூட்டமாக சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
முக்கிய நடிகர்களை மட்டும் வைத்து, அவுட்டோர் செல்லாமல் முகத்தில் முகமூடி அணிந்து, அனைவரும் பட பிடிப்பு தளத்தில் இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம் ஏனென்றால் மீண்டும் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு நம் தள்ளப்படக்கூடாது.
ஆகையால், 25, 26ஆம் தேதி வரை பொறுத்துக் கொள்ளவும். மே மாதம் 11ஆம் தேதி தொலைக்காட்சியில் மெகா தொடர்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் கூறியதை இன்னும் ஒரு வார காலம் நீட்டித்தால் உதவியாக இருக்கும்.
அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோட்களாவது எடுக்க வேண்டும். அப்படி எடுத்து வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். நேரத்திற்கு படப்பிடிப்பை தொடங்குகள்.