தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்கு பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'புஷ்பா' படப்பிடிப்பில் ஃபகத் பாசில்!
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் பாசில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது ஃபகத் பாசில் புஷ்பா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ஃபகத் பாசில் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் வெளியீடாக இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.