'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர், விஜய் தேவரகொண்டா. குறிப்பாக, இவருக்கு ரசிகைகள் பட்டாளமே அதிகமாக இருக்கிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்குப் பெண் ரசிகர்கள் ஏராளம். இவரது புகைப்படங்களைப் பார்ப்பதற்கு என்றே ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா சொந்தமாக புதிய மல்டிபிளெக்ஸ் திரையரங்கை செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளார். 'ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ்' (எவிடி) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரையரங்குகள், விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது பெற்றோரின் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூப்நகரில் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு இனிமையான மகிழ்ச்சியான முக்கியமான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த வீடியோ.
பல நாட்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு நடிகரானேன். அப்படி கனவு கண்டது நேற்று நடந்தது போல் இருக்கிறது. என்னுடைய முதல் மல்டிபிளெக்ஸ் திரையரங்கு திறப்பு பற்றி உங்களிடம் இன்று பகிர்கிறேன். ஏவிடி - ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ். எனது அப்பா, அம்மா சொந்த ஊரான மெகபூப் நகரில் திறக்கிறேன்.