தமிழ்நாடு

tamil nadu

ரஜினியுடன் செல்ஃபி எடுத்துகொண்ட பக்தர்கள்!

By

Published : Oct 14, 2019, 11:50 AM IST

சுவாமி தயானந்த ஆசிரமத்தில் உள்ள ரஜினிகாந்துடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

rajini

ஒவ்வொரு படப்பிடிப்பு முடிவடைந்த பின்பு இமயமலைக்கு செல்வதை ரஜினி வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் இமயமலைக்கு செல்வதை தவிர்த்து வந்தார். காலா, 2.O உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் இமயமலைக்கு செல்லத் தொடங்கினார்.

இந்நிலையில், தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். இதற்காக ரஜினி நேற்று சென்னையில் விமானம் மூலம் டேராடூன் சென்றார். பின் அவர் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் தங்கினார்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவரை அடையாளம் கண்டு, அவருடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரஜினி சில நாட்கள் அங்கு தங்கி பின் இமயமலை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 12ஆம் தேதி சிவாவின் '#Thalaivar 168' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: ரஜினி பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

ABOUT THE AUTHOR

...view details