தனுஷை வைத்து 'திருடா திருடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இயக்குநர் சுப்ரமணியம் சிவா. இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'பொறி', 'யோகி', 'சீடன்' ஆகியப் படங்களை இயக்கினார்.
இதனையடுத்து சுப்ரமணியம் சிவா சமுத்திரக்கனியை வைத்து 'வெள்ளை யானை' படத்தை இயக்கியுள்ளார். இதில், சமுத்திரக்கனியுடன் நடிகர் யோகி பாபு, நடிகைகள் ஆத்மியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயம், விவசாயிகள் குறித்தான 'வெள்ளை யானை' படத்தின் படப்பிடிப்புகள், இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், திரைக்கு வர தயாரானது.