தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான் போலீஸ் மட்டும் இல்லப்பா... பாட்டும் பாடுவேன் ரூபாவின் அதிரடி!

காவல்துறை அலுவலர் ரூபா யாதாவ் திரைப்படம் ஒன்றில் பாடல் பாடி தற்போது பாடகியாக அறிமுகமாகி உள்ளார்.

By

Published : Aug 13, 2019, 11:47 AM IST

Roopa Yadav

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறை விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டை சுமத்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவர் காவல்துறை அலுவலர் ரூபா.

பாடகியான ரூபா

இந்த நிலையில், கன்னடத்தில் உருவாகி வரும் 'பேயலதாதா பீமண்ணா' என்னும் திரைப்படத்தில் பாடல் ஒன்றை ரூபா பாடி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இப்பாடல் டூயட் பாடல் கிடையாது. நான் இந்துஸ்தானி இசையை கற்றுவருகிறேன். இப்பாடல் பாடுவதற்கு ஒரு வாரம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன.’ என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details