நாராயணர் மனுவாக தோன்றி வைகுண்டராக நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் படமாக ‘ஒரு குடைக்குள்’ உருவாகியுள்ளது. கலி என்னும் மாயையிலிருந்து, மக்களை தர்மயுக வாழ்விற்கு அழைத்துச் செல்ல வந்த கடவுளின் கதை இது.
வைகுண்டராக ஆனந்த் நடித்துள்ளார். பக்தையாக மேக்னாராஜ் நடித்துள்ளார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவர்களுடன் நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.