நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக, ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து ரஜினியின் ’அண்ணாத்த’, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
இதனையடுத்து அவர் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் தொடர்ச்சியாகத் தயாரிக்கும் எட்டு படங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.